வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி

கோவை மாவட்டம், வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தவிர பொதுமக்கள் கேள்வி கேட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தம்.



கோவை: வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் திடீரென நுழைந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகரமன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் ஆணையாளர் பாலு மற்றும் பொறியாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் வார்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அவர்களது வார்டு பகுதியில் உள்ள பிரச்சினைகளைப் பேசி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று வால்பாறை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், நகர மன்றம் கூட்டு அரங்கத்தில் நுழைந்தனர்.



நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் பாலுவிடம் 10 மாதங்கள் ஆகியும் மக்கள் பணிகளைச் செய்யவில்லை, சாலை வசதி, தெருவிளக்கு குடிநீர் போன்ற தேவைகளுக்கு நகராட்சியில் வேலைகளுக்கு பலகோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை வேலைகள் நடக்கவில்லை என்று புகார்கள் எழுப்பினர்.



இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் நகரமன்ற கூட்டத்தில் பொதுமக்கள் எப்படி வருகிறார்கள், இது நகரமன்ற கூட்டமா? இல்லை பொதுக்கூட்டமா? என்று கேள்வி எழுப்பி கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் நகரமன்ற கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...