கோவை கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கோவை கிணத்துக்கடவு அருகே கோவிந்த நாயக்கனூரில் உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர்.



கோவை: கோவிந்த நாயக்கனூரில் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவிந்த நாயக்கனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புவியியல் மற்றும் சுங்கத்துறை துணை வட்டாட்சியர் பிரேமலதா இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.



அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் 2யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர் பிரேமலதா, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...