அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு -சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும், ஒ.பன்னீர்செல்வம் முதல்வாரக தொடர வேண்டுமென்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டுமென்ற தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு இப்படி தான் வர வேண்டுமென மக்கள் விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக உடையக்கூடாது என்பதற்காக தான் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் போது ஆதரவு அளித்ததாகவும், ஆனால் அன்றைய நிலை இன்று இல்லை எனவும் கூறிய அவர், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருவார்கள் எனவும், கட்சி உடையக்கூடாது என விரும்பினால் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். சசிகலாவிற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்த போது முன்கூட்டியே எடப்பாடி பழனிச்சாமியை ஏன் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், ஒ.பன்னீர்செல்வத்தை தவிர வேறு யாரையும் முதல்வராக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...