கோவை மாநகராட்சி கூட்டத்தில் குடும்பத்துடன் இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கோவை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென டீசல் கேனுடன் வந்த இளைஞர், தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.



கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



அப்போது மதியம் சுமார் ஒரு மணியளவில் கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பு வந்த இளைஞர் ஒருவர் தனது கை குழந்தை மற்றும் மனைவியுடன் டீசல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.



இந்நிலையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு இளைஞரின் கையிலிருந்த கேனை பிடுங்கினர்.

அவரிடம் விசாரித்த போது, கோவை குனியம்புத்தூரை சேர்ந்த நவீன் என்றும், சுமார் 5 ஆண்டுகளாக மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்ததாகவும், தனக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்ட போது சரிவரப் பதில் கூறவில்லை எனவும் அலட்சியமாக நடத்துவதாகவும், பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டுவதாகவும், துணை மேயர் உடன் உள்ள டேவிட் என்பவரும், உதவிப் பொறியாளர் ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதனிடையே தற்கொலைக்கு முயன்றவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞரின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...