கோவையில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு!

கோவை சின்னவேடம்பட்டியில் குடும்பத் தகராறில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவையில் குடிபோதையில் மாமியாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மலர்விழி (48). இவரது மகளை நாகராஜ் என்பவர் திருமணம் செய்துள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

மருமகன் நாகராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ் மீண்டும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை மாமியார் மலர்விழி தட்டிக்கேட்டதால், அவருக்கும் நாகராஜ்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மலர்விழியை நாகராஜ் கடுமையாக தாக்கி அவதூறாக பேசியதோடு வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார். மீண்டும் அவரை கொடூரமாக தாக்கியதில் பலத்த ரத்த காயத்துடன் மலர்விழி மயங்கினார்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் மலர்விழி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் மருமகன் நாகராஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...