தாராபுரம் அருகே தாளக்கரை அமராவதி ஆற்றில் ராட்சத முதலை - பொதுமக்கள் பீதி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தாளக்கரை அமராவதி ஆற்றில் வரும் ராட்சத முதலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தாளக்கரை அமராவதி ஆற்றில் 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலையை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றிற்கு துணி துவைக்க சென்றபோது பார்த்துள்ளார்.

உடனே தனது கையில் இருந்த மொபைல் கேமராவில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் தாராபுரம் அமராவதி ஆற்றுப்படுகையில் முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கடந்த மூன்று மாதங்களாக அமராவதி ஆற்றில் சீதக்காடு என்ற இடத்தில் இரண்டு முதலைகளும், கன்னிவாடி பேரூராட்சி மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் ஒரு முதலையும் இருந்து வருகிறது.



இந்த முதலைகள் பிடிபடாமல் இருந்து வரும் நிலையில், தாளக்கரை அமராவதி ஆற்றில் 8 அடி நீளம் கொண்ட முதலை இருப்பது பொதுமக்களை பீதி அடைய செய்துள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...