தாராபுரம் அருகே தாளக்கரை அமராவதி ஆற்றில் ராட்சத முதலை - பொதுமக்கள் பீதி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தாளக்கரை அமராவதி ஆற்றில் வரும் ராட்சத முதலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தாளக்கரை அமராவதி ஆற்றில் 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலையை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றிற்கு துணி துவைக்க சென்றபோது பார்த்துள்ளார்.

உடனே தனது கையில் இருந்த மொபைல் கேமராவில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் தாராபுரம் அமராவதி ஆற்றுப்படுகையில் முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கடந்த மூன்று மாதங்களாக அமராவதி ஆற்றில் சீதக்காடு என்ற இடத்தில் இரண்டு முதலைகளும், கன்னிவாடி பேரூராட்சி மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் ஒரு முதலையும் இருந்து வருகிறது.



இந்த முதலைகள் பிடிபடாமல் இருந்து வரும் நிலையில், தாளக்கரை அமராவதி ஆற்றில் 8 அடி நீளம் கொண்ட முதலை இருப்பது பொதுமக்களை பீதி அடைய செய்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...