தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி எதிரொலியாக உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தென்னை விவசாயிகள், தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த கெடிமேடு பகுதியில் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) தேங்காய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட போது உரிக்கூலியாக தேங்காய்க்கு 82 பைசா வழங்கப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் 70 பைசாவாக குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2) மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையாக 150 ரூபாய் வழங்க வேண்டும்.

3) தேங்காய் எண்ணெய் தயாரிப்பு ஆலைகளை தமிழகத்தில் உருவாக்கி நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்

இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...