தாராபுரம் அருகே கட்டிட பணியின் போது மாரடைப்பு - 20 வயது இளைஞர் பலி

தாராபுரம் அடுத்த குண்டடம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20) என்பவர் கட்டிட வேலையில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தில் கட்டிடத்தில் வேலை பார்த்தபோது 20வயது இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தாராபுரம் அடுத்த குண்டடம் ஜோதியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (20). கட்டிட தொழிலாளியான இவர், குண்டடம் வாஜ்பாய் நகரில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...