கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிப்பு

கோவை வைசியால் வீதியில் கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டு செயினை பறித்துச் சென்ற 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு.


கோவை: கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் ஓணாம்பாளையத்தை சேர்ந்தவர் பாக்கியவதி (63). இவர் நேற்று மாலை டவுன்ஹாலுக்கு பேருந்தில் வந்து கோவிலுக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றார்.

அப்போது வைசியால் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, பாக்கியவதியிடம் இரண்டு பெண்கள் வந்து உக்கடம் செல்லும் பேருந்து எங்கே வரும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

அப்போது திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் வந்து பாக்கியவதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்கள் உட்பட நான்கு மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...