நீலகிரியில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உட்பட இருவர் கைது..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.



நீலகிரி: கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீஜித். அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்.

இந்நிலையில், இவர்களிடம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிராமப்புற குடிசை மாற்று வீடு கட்டுவதற்காக கதவு எண் பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், கதவு எண் வழங்காமல் தாமதித்து வந்ததுடன், அதற்காக 11,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டுமென ஸ்ரீஜித் கேட்டதாக கூறப்படுகிறது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் கலந்த 11,000 ரூபாயை கொடுத்து ஸ்ரீஜித்தின் உதவியாளர் ரமேஷிடம் கொடுக்க வைத்துள்ளனர்.



இந்நிலையில், ரமேஷ் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...