கோவை டூ சென்னைக்கு தொடர் சைக்கிள் பயணம் - கோவை கல்லூரி மாணவர் ஜீவா சாதனை!

கோவையில் இருந்து சென்னைக்கு நிற்காமல் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்த கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஜீவாவுக்கு கலாம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.



கோவை: கோவையில் இருந்து சென்னைக்கு இடைநில்லாமல் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்த கல்லூரி மாணவர் ஜீவாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவையை சேர்ந்த ஜீவா என்ற இளைஞர், தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த ஜீவாவுக்கு அதிக தூரம் சைக்கிளில் பயணிப்பது பொழுதுபோக்காக இருந்து வருகிறது.



இந்த நிலையில் ஜீவா கோவை முதல் சென்னை வரை இடைநில்லாமல் சைக்கிளில் பயணித்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி சரவணம்பட்டியில் காலை 4 மணிக்கு சைக்கிளில் புறப்பட்ட ஜீவா அடுத்த நாள் காலை 9:30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை வரை சென்றுள்ளார்.



சிக்னல்களில் காவல் துறை உதவியுடன் கடந்து சென்ற கல்லூரி மாணவர் ஜீவா இடைநில்லாமல் 520 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதை அங்கிகரித்த கலாம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர், "நான் ஸ்டாப் சைக்கிளிங் ஆன் சிங்கிள் ஸ்பீடு ரைடர் எம் டி பி" சாதனையாளராக அங்கிகரித்து சான்றிதழ் வழங்கி மாணவர் ஜீவாவை கௌரவித்துள்ளனர்.

சைக்கிளிங்கை பொழுதுபோக்காக ஆரம்பித்த கல்லூரி மாணவர் ஜீவா வருங்காலங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிளிங் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...