உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால திறன் பயிற்சி

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், குறுகிய கால திறன் பயிற்சி பெற விரும்புவோர், திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.


திருப்பூர்: உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில், குறுகிய கால திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், தமிழக அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறுகிய கால திறன் பயிற்சி அளிக்கும் மையமாகப் படச் செயல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரீசியன் டொமஸ் சொல்யூசன்ஸ், தொழிற்பிரிவு, 100 நாட்கள், 400 மணி நேரம் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

இதில் சேர, 8, 10ஆம் வகுப்பு அல்லது ஒரு ஆண்டு முன் அனுபவம் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், 18 முதல் 45 வயது வரை உள்ள, ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

இலவச பயிற்சி முடிவில் அரசு சான்றிதழுடன், முன்னணி நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன், உடனடி வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேருபவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் போக்குவரத்து படி வழங்கப்படும்.

பயிற்சி பெற விரும்புவோர், உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம், என அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ராஜேஸ்வரி விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...