உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால திறன் பயிற்சி

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், குறுகிய கால திறன் பயிற்சி பெற விரும்புவோர், திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.


திருப்பூர்: உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில், குறுகிய கால திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், தமிழக அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறுகிய கால திறன் பயிற்சி அளிக்கும் மையமாகப் படச் செயல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரீசியன் டொமஸ் சொல்யூசன்ஸ், தொழிற்பிரிவு, 100 நாட்கள், 400 மணி நேரம் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

இதில் சேர, 8, 10ஆம் வகுப்பு அல்லது ஒரு ஆண்டு முன் அனுபவம் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், 18 முதல் 45 வயது வரை உள்ள, ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

இலவச பயிற்சி முடிவில் அரசு சான்றிதழுடன், முன்னணி நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன், உடனடி வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேருபவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் போக்குவரத்து படி வழங்கப்படும்.

பயிற்சி பெற விரும்புவோர், உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம், என அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ராஜேஸ்வரி விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...