உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிகல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பிறப்பு மற்றும் 18 வயது உடைய குழந்தைகளுக்கு உதவி செய்தல், உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.



இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாத பராமரிப்பு தொகை பெற பரிந்துரை செய்வது, மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பதிவு செய்தல், கண் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகை மருத்துவமும் பார்க்கப்பட்டன.

இந்த முகாமில் அனைத்து வகை மருத்துவர்களும் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து, ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...