திருப்பூர் ஓடக்காடு பகுதியில் அதிகாலையில் பைக் திருட்டு - வீடியோ வைரல்

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் அதிகாலையில் வாலிபர்கள் பைக் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் வாலிபர்கள் பைக் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

திருப்பூர் ஓடக்காடு, காலேஜ் ரோடு 7ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தனது பைக்கினை வீட்டு முன் நிறுத்தி விட்டு இரவு தூங்க சென்றுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது பைக் மாயமாகி இருந்தது.



இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை 3 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சாவகாசமாக வெங்கட்டின் பைக்கினையும், பக்கத்து வீட்டினை சேர்ந்த இன்னொருவரின் பைக்கையும், சைடு லாக்கினை உடைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

பைக் திருட வந்த இருவரும் சொந்த வாகனத்தை எடுத்துச் செல்வது போல ஆளுக்கொரு வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்குப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே இடத்தில் இரண்டு பைக்குக்களை திருடிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாநகரில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களைத் திருடிச்செல்லும் சம்பவங்களும், அந்த வாகனங்கள் மூலம் வழிப்பறி, திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனால் அப்பாவி வாகன உரிமையாளர்கள் பெரும் சிக்கலுக்கும், அலைச்சலுக்கும் ஆளாவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

திருப்பூர் போலீசார் முழுமையாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகன திருட்டுகளைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...