உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வீரர்கள் கோரிக்கை!

உடுமலையில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த விளையாட்டு துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து மேம்படுத்த விளையாட்டுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறன்களை வளர்க்க நகரின் மத்தியில் 6.30 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டு நேதாஜி விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டது.



பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், உடுமலை நகரின் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய பயிற்சிக்களமாக நேதாஜி விளையாட்டு மைதானம் விளங்கி வருகிறது.



ஹாக்கி, கிரிக்கெட், கூடைப்பந்து உட்பட விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர்.



மைதானத்தில் பயிற்சிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றன.

இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான தளம் மட்டும் கட்டப்பட்டு உள்ளது. பிற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மைதானத்தின் ஒரு பகுதி புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் குழுவினர் நகராட்சி நிர்வாகம் வருவாய் துறையினர் உள்ளிட்ட குழு சார்பில் கடந்த 2019 ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், நேதாஜி மைதானத்தில் 6 கோடி ரூபாய் செலவில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்படும் நடைபயிற்சி மேற்கொள்வர்களுக்கு தனியாக இடம், தடகளப் போட்டியில், பங்கேற்கும் வேலைகளுக்கு பயிற்சி செய்யவும், மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தவும் தனி ட்ராக் அமைக்கப்படும்.

இதற்கு தேவையான கருத்துருவை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தயாரித்து சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த நேதாஜி மைதான மேம்பாடு விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்போடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்திட்டத்தை கண்டு கொள்வதில்லை எனக்கூறும் வீரர்கள், மழை காலங்களில் கூடைப்பந்து மைதானத்தை ஒட்டி தண்ணீர் தேங்குவதும் ஸ்கேட்டிங் தளத்தின் அருகில் புதர் மண்டி விஷச்சந்துக்கள் நடமாடுவதும் தொடர்கதையாக உள்ளதாக கூறுகின்றனர்.

மைதானத்தின் மையப் பகுதிகள் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறுவதால் கிரிக்கெட் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

நூற்றுக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமையையும் அவர்களின் கனவையும் நினைவாக்கும் உதவும் மைதானத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...