வண்ணமயமான ஓவியங்களால் அழகாகும் கோவை மேம்பாலங்கள்- சுவரொட்டிப் பிரச்சனைக்குத் தீர்வு?

கோவையில் அரசுக்கு சொந்தமான பாலங்கள், சுவர்களில் விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்த இடங்களில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் சமீபகாலமாக சுவரொட்டிகள் ஒட்டும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மாநகரில் அரசுக்கு சொந்தமான பாலங்கள், சுவர்களில் அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகளையும் மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.

பலமுறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிக்கைகள் கொடுக்கப்பட்ட போதிலும், அரசியல் கட்சியினர் தொடர்ந்து சுவரொட்டிகளை ஒட்டிவருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.



இந்த நிலையில், இதைத் தடுக்கும் நோக்கில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட மேம்பால தூண்களில் உள்ள சுவரொட்டிகளை அகற்றிவிட்டு, அதில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



இயற்கை சார்ந்த ஓவியங்கள்,பொற்கால ஒவியங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படம், தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் உள்ளிட்டவை ஓவியங்களாக வரையப்பட்டுவருகின்றன.

கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் பணியை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...