வண்ணமயமான ஓவியங்களால் அழகாகும் கோவை மேம்பாலங்கள்- சுவரொட்டிப் பிரச்சனைக்குத் தீர்வு?

கோவையில் அரசுக்கு சொந்தமான பாலங்கள், சுவர்களில் விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்த இடங்களில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் சமீபகாலமாக சுவரொட்டிகள் ஒட்டும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மாநகரில் அரசுக்கு சொந்தமான பாலங்கள், சுவர்களில் அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகளையும் மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.

பலமுறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிக்கைகள் கொடுக்கப்பட்ட போதிலும், அரசியல் கட்சியினர் தொடர்ந்து சுவரொட்டிகளை ஒட்டிவருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.



இந்த நிலையில், இதைத் தடுக்கும் நோக்கில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட மேம்பால தூண்களில் உள்ள சுவரொட்டிகளை அகற்றிவிட்டு, அதில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



இயற்கை சார்ந்த ஓவியங்கள்,பொற்கால ஒவியங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படம், தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் உள்ளிட்டவை ஓவியங்களாக வரையப்பட்டுவருகின்றன.

கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் பணியை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...