அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இன்று அவிநாசியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.



அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக தொடங்கிய ரோடு ஷோ, லிங்கேஸ்வரர் கோவில் தேர் நிலை வரை நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மோகன் யாதவ் கலந்து கொண்டார்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “அவிநாசி புனித பூமியில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நாடு முழுவதும் நிலவும் எழுச்சியைப் போல இங்கும் எல்.முருகனுக்கு வாக்களியுங்கள். சாதாரண மக்கள் கூட பிரதமராகவும் அமைச்சராகவும் வரலாம். ஆனால் திமுகவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பதவிக்கு வர முடியும்,” என்றார்.



மேலும், “நமது பாரம்பரியம், கலாச்சாரம் கோவில்களில் உள்ளது. ஆனால் திமுக கோவில்களுக்கும் சனாதனத்திற்கும் எதிராக உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எல்.முருகன், “இது திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம். ஊழல், லஞ்சம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இரட்டை எஞ்சின் ஆட்சி அமைந்தால் 2-ஆம் கட்ட அத்திக்கடவு திட்டம் நிறைவேறும். அவிநாசி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்,” என்றார்.



மேலும், “ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் பெற்றுத் தரப்படும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம். மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்,” என வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...