கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனல் நிறுவனருமான செந்தில்வேல் பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதியின் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.



அதற்கு முன்பாக, பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனலின் நிறுவனருமான செந்தில்வேல், திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பெண்களுக்காக இந்த ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் ஆரோக்கியத்தை பாதுகாக்க கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை வழங்கி பெண்களின் பொருளாதார நிலை உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார்.



மேலும், “எதிர்க்கட்சிகளிடம் மக்களுக்காக செய்த சாதனைகள் எதுவும் இல்லாததால் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணியில் அனைத்து முடிவுகளையும் பாஜகவே எடுக்கிறது. தமிழ்நாட்டில் சாதி, மத அரசியலை கொண்டு வர முயற்சிக்கின்றனர்,” என குற்றம்சாட்டினார்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...