பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன.


கோவை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டன.



2026 சட்டமன்றத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொள்ளாச்சி சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ணசாமி மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...