கோவை துடியலூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது - போலீசார் அதிரடி..!

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் அரவிந்தராஜன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முன்னாள் குற்றவாளியான கார்த்திகேயன் என்பவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பழைய குற்றவாளியான கார்த்திகேயன் மீது ஏற்கனவே துடியலூர், வடவள்ளி, போத்தனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...