கோவை துடியலூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது - போலீசார் அதிரடி..!

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் அரவிந்தராஜன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முன்னாள் குற்றவாளியான கார்த்திகேயன் என்பவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பழைய குற்றவாளியான கார்த்திகேயன் மீது ஏற்கனவே துடியலூர், வடவள்ளி, போத்தனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...