உக்கடத்தில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் - சுவிஸ் குழுவுடன் கோவை மேயர் ஆய்வு!

உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து சுவிஸ் வளர்ச்சி நிறுவன குழுவுடன் மாநகராட்சி மேயர் கல்பனா, ஆணையர் பிரதாப் ஆய்வு.


கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் சோலார் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து சுவிஸ் வளர்ச்சி நிறுவன குழுவுடன் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தனர்.

கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சோலார் பேனல் உற்பத்தி நிலையம் அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா, சுவிஸ் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர் தூதா கிறிஸ்டியன் ஃப்ரூட்டிகர் மற்றும் குழுவினர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.



மேலும், சுவிட்சர்லாந்து தூதரகம் இந்தியாவின் 8 நகரங்களை தேர்வு செய்து கெப்பாசிட்டீஸ் திட்டத்தை (Capacities Project)செயல்படுத்தி வருகிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நிருநெல்வேலி நகரங்களை தேர்வு செய்துள்ளது.

அதேபோல் அகமதாபாத், பரோடா, ராஜ்கோட், உதய்பூர் மற்றும் சிலிகுரி ஆகிய நகரங்களையும் தேர்வு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் பகுதியில் கோவை மாநகராட்சியில் 1.5 டன் அளவு கொண்ட பயோ கேஸ் திட்டம் சுவிட்சர்லாந்து தூதரக நிதியுதவியின் கீழ் பாரதி பார்க் மாநகராட்சி வாகன பணிமனையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் காற்று மாசுபாடு அளவிடும் கருவிகள் கோவை மாநகராட்சியின் மூன்று இடங்களில் (மாநகராட்சி பிரதான அலுவலகம், கிழக்கு மண்டல அலுவலகம் மற்றும் ராமகிருஷ்ணா வாட்டர் டேங்க்) நிறுவப்பட்டுள்ளது.

(CapaCITIES Project) கெப்பாசிட்டீஸ் திட்டத்தின் 2வது பகுதியில் கோவை மாநகராட்சி உக்கடம் பெரிய குளத்தில் 140 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய ஒளி உற்பத்தி நிலையம் அமைத்திட சுவிட்சர்லாந்து தூதரகத்தின் சார்பில் 50 சதவீத நிதியுதவியும், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 50 சதவீத நிதியுதவியும் பெற்று திட்டத்தினை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இக்கூட்டத்தில், இந்தியா மற்றும் பூட்டானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணை தலைவர் அமைச்சர் ஆலிவர் பிங்க், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தலைமை பிரிவு ஜனைன் குரிகர், இந்தியா மற்றும் நேபால் நிகழ்ச்சியின் மேலாளர் மார்க்கோ ஆண்ட்ரியூ, ஆலோசகர் மற்றும் கூட்டுறவு தலைவர்கள் ஜொனாதன் டெமெங்கே, கொரின் டெமெங்கே. ஆலோசகர் ஷஞ்சி தாஸ்குப்தா, சௌமியா சதுர்வேதுலா, மெகுல் பட்வாரி, மாநகராட்சி துணை செந்தில் பாஸ்கர், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...