கோவை ஆத்துப்பாலம் வழியாகக் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

கோவை ஆத்துப்பாலம் வழியாக உக்கடம், கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீசார் அறிவிப்பு.


கோவை: உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக, கோட்டப் பொறியாளர் சாலை பாதுகாப்பு, மனுநீதி மற்றும் அந்த பிரிவைச் சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து, இன்று மாலை 4 மணிமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டிலிருந்து, ஆத்துப்பாலம் வழியாக, கோவை மாநகருக்குள், உக்கடம் நோக்கி வரும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, ரோட்டிலிருந்து கோவை மாநகருக்குள், வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் நோக்கி, வலதுபுறம் திரும்பத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகன ஓட்டிகள், நேராக சுமார் 500 மீட்டர் தொலைவில் திரும்பி இடதுபுறமாகத் திரும்பி, உக்கடம் நோக்கி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பாலக்காடு சாலை வழியாக, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், மற்றும் சரக்கு வாகனங்கள், கோவைப்புதூர் பிரிவில், இடதுபுறமாகத் திரும்பியும் அல்லது சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு, புட்டுவிக்கி சாலையில் இடதுபுறமாகத் திரும்பி, சுண்டக்காமுத்தூர் சாலை வழியாக, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பொள்ளாச்சி சாலையிலிருந்து, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், சுந்தராபுரம் சந்திப்பில், வலதுபுறமாகத் திரும்பி, போத்தனூர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் ரோடு வழியாக, கோவை மாநகருக்குள் செல்லலாம்.

அதேபோல், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு, செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகள், ஆத்துப்பாலம் வழியாக, வழக்கம்போல், எந்தவித தடையுமின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...