அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஊழல் புகார் - 70 பக்க ஆவணங்கள் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது அளித்த ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் மீண்டும் 70 பக்க ஆவணங்களை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பேருந்து நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வதில் ஊழல் செய்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோதும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் செய்திருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதில், உடுமலை ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது எத்தனை திட்டங்கள் கையெழுத்தானது, முடிக்கப்பட்டதாக கூறிய பணிகள் நிறைவடையாமல் உள்ள புகைப்படங்களுடன் ஆவணங்களை அளித்துள்ளதாக கூறிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், முன்னாள் அமைச்சர் மீதான தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...