அண்ணா நினைவு தினம் - நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி உதகை நகர திமுக சார்பில் நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நீலகிரி: பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு எம்.பி ஆ.ராசாவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி நீலகிரி மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கும், படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், உதகை நகர திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து ஹில் பங்க் பகுதியில் உள்ள நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் அண்ணாவின் உருவ படத்திற்கு உதகை நகர திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், உதகை நகர திமுக செயலாளர் ஜார்ஜ், ஆ.ராசாவின் நேர்முக உதவியாளர் நந்தி ரவி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், நகர கழகத் துணைச் செயலாளர்கள் கார்டன் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர் ரவீந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், வனிதா, மேரி பிளோரினா, பிரியா, கழக நிர்வாகிகள் மஞ்சு குமார், குழந்தைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...