கோத்தகிரி அருகே உலா வரும் கரடி - கூண்டு வைத்து பிடிக்கக் கோரிக்கை!

கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம். கூண்டு வைத்து கரடியை விரைவில் பிடிக்கும்படி மக்கள் கோரிக்கை.



நீலகிரி: பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து அரவேணு செல்லும் சாலையில் பெரியார் நகர் பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்பைச் சுற்றிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 கருஞ்சிறுத்தை, 2 சிறுத்தை என 4 சிறுத்தைகள் உலா வந்தன.

அதேபோல் கரடிகளும் தொடர்ந்து உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். மேலும் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினருக்குத் தொடர் கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து கடந்த சில நாட்களாகக் கரடி நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒற்றைக் கரடி உலா வந்தது. நீண்ட நேரம் குடியிருப்பைச் சுற்றி வந்த கரடி பின்பு தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது.

அப்பகுதியில் உள்ள குடியிருப்பைச் சுற்றி கரடிகள் தொடர்ந்து உலா வருவதை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து, வேறு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் பிடிபட்ட இரண்டு கரடிகள் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...