கோவையில் மதநல்லிணக்கம் - பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்!

கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகள் வழங்கிய இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.



கோவை: கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பழனிக்குப் பாதயாத்திரை ஆக பக்தர்கள் செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவையிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் செல்கின்றனர்.



இந்த நிலையில் கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதில் கோவை அறக்கட்டளை தலைவர் சையது இப்ராஹிம், செயலாளர் மன்சூர், பொருளாளர் நிஜாம்தீன், கௌரவ ஆலோசகர் கந்தசாமி மற்றும் பசியில்லா கோவை அறக்கட்டளை சேர்ந்த இஸ்மாயில், பாரூக், பஷீர், தளபதி மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...