யானைகள் பராமரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி - முதுமலை புலிகள் காப்பக யானை பாகன்கள் உட்பட 8 பேர் தாய்லாந்து பயணம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள யானை பாகன்கள், காவடிகள் மற்றும் கால்நடை ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் தாய்லாந்தில் நடைபெறும் யானைகளை பராமரிப்பது குறித்த சிறப்புப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர். இதற்காக அவர்கள் அனைவரும் தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. யானைகளை பராமரித்து, வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குரும்பர் பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



இவர்கள் தங்களுக்கு என்று ஒரு யானையை தேர்வு செய்து பராமரித்து வருகின்றனர். இவர்களின் சொல்லுக்கு யானைகள் கட்டுப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் ஒரு பாகன், ஒரு காவடி என்றழைக்கப்படும் உதவியாளர்கள் உள்ள நிலையில் இங்குள்ள பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு யானை வளர்ப்பில் பல புதிய யுக்திகளை கையாளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.



இதற்காக 4 யானை பாகன்கள் 3 காவடிகள், ஒரு வன கால்நடை ஆய்வாளர் என 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.



இவர்களை தாய்லாந்து நாட்டுக்கு அனுப்ப தமிழக அரசு 40 லட்சம் ரூபாயை ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில், வன கால்நடை ஆய்வாளர் ரமேஷ், யானை மாவுத்கள் சுரேஷ், T.M பொம்மன், C.M பொம்மன், காவடிகள் குள்ளன், கேத்தன், சிவன், காலன் ஆகிய 8 பேர் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று தாய்லாந்து செல்கின்றனர்.

தாய்லாந்தில் உள்ள தாய் வளர்ப்பு யானைகள் முகாமில் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இவர்கள் 8 பேரும் தங்கி, உலக அளவில் கும்கியானைகள் எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்த பயிற்சி மற்றும் யுக்திகள் கற்றுக்கொள்ளவுள்ளனர்.

Newsletter

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழாவில் 351 மாணவர்களுக்கு பட்டங்கள்

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 351 மாணவர்களுக்கு பட்டங்கள்...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறுவர்களுக்கான கோடை பயிலரங்கு நிறைவு விழா நடைபெற்றது

கோவை கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு நடைப...

கோடை விடுமுறை முடிவு: திருப்பூர் பள்ளிகள் திறப்பு - மாணவிகளுக்கு இனிப்பு, ரோஜா பூக்களுடன் வரவேற்பு

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிவில் மாணவிகளுக்கு போலீசார் மற்றும் ஆசிரிய...

சூலூர் சிறுமி வழக்கு: சம்பவ இடத்திற்கு குற்றவாளியை அழைத்துச் சென்று விசாரணை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி கார்த்தியை சம்பவ இடமான கண்ணம்பாளையம் குள...

கோவையில் மூன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொண்ட...

காரமடை அருகே பேப்பர் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவை காரமடை அருகே 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இத...