கோவை சாலைகளில் இனி 'அ, ஆ, இ, ஈ' படிக்கலாம் மக்களே..! - தமிழுக்கு பெருமை சேர்க்கும் புதிய முயற்சி!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கோவை: கோவை மாநகரை அழகுற மாற்றும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் மீடியாடவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இவ்விரு பணிகளும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தப் பகுதிகளில் அ, ஆ, இ, ஈ என தமிழ் எழுத்துகளை பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டியில் தமிழ்மொழி உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அ, ஆ, இ, ஈ என்ற எழுத்துகளை பதிக்கின்றோம்.



இதன் மூலம் இப்பகுதியில் எப்படி வந்தாலும் மேல்இருந்தும்., கீழே இருந்தும் எழுத்துகளை முழுமையாக படிக்க முடியும்.



குழந்தைகள் இவ்வெழுத்துகளை எளிமையாக படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், மாலை நேரங்களில் ஒளிரும் விளக்குகளில் இந்த எழுத்துக்கள் பிரகாசமாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுவருகிறது. அடுத்த வார இறுதிக்குள் இந்தப் பணிகள் முழுமை பெற்றுவிடும், என்றனர்.



ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக அவ்வப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மக்கள் இவற்றின் முழுமையான வடிவை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...