வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி உயிரிழந்த நீல வால் கருமந்தி

வால்பாறை அருகே சோலையாறு அணை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த நிலையில், வாகனங்கள் கவனமாக செல்லும்படி வனத்துறை எச்சரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதியில் வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் அரிய வகையான சிங்கவால் குரங்கு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை தனியார் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், வனத்துறையினரும் பாதுகாத்து வருகின்றனர்.



இதனிடையே, வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் சேடல் அனை அண்ணா நகர் பகுதியில் சாலையை கடக்க வந்த நீல வால் கருமந்தி, அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி அடிபட்டு இறந்து கிடந்துள்ளது.



இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீலவால் கருமந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

இந்நிலையில், வால்பாறை வனப்பகுதி சாலையில் வாகனங்கள் வரும் பொழுது மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...