கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சரவணம்பட்டி அருகே வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே தை பூசத்துக்காக கோயிலுக்கு சென்றவர்கள் வீட்டில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி அருகேயுள்ள காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் (62) - ரஞ்சனா (46) தம்பதி. 2 மகள்களுடன் வசித்து வந்த இவர்கள், நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தைப்பூசத்திற்காக மருதமலைக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் மகேந்திரன் வீட்டின் அக்கம்பக்கத்தினர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீடு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், மருதமலைக்கு பாதயாத்திரை சென்ற மகேந்திரன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...