ரிமேக் படங்களின் வெற்றி சினிமாவுக்கு ஆரோக்கியமே - கோவையில் நடிகை ரம்யா நம்பீசன் கருத்து

கோவை கணுவாய் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரம்யா நம்பீசன், வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.


கோவை: வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக அமைந்திருப்பதாக நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.



கோவை கணுவாய் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் (ஜே.எம். ஹவுசிங் வீட்டுமனை விற்பனை துவக்க விழா) பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.



அப்போது அவர் பேசியதாவது, திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் நம்மை விட்டுப் பிரிந்தது, மீளாத்துயரம். தற்போது, நான் OTT தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன்.வெப் தொடர்கள் தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

ரீமேக் படங்கள் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், மலையாளத்திலிருந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுவது, திரைப்படத் துறைக்கு ஆரோக்கியமே.

இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா நம்பீசன் அவர் பாடிய ஃபை ஃபை என்ற பாடலை பாடினார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...