ஈரோட்டுக்கு சென்ற ஆதியோகி ரத யாத்திரை - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு சென்ற ஆதியோகி ரத யாத்திரையை ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் அருகிலேயே‌ கண்டு ரசித்து ஆதியோகியை நேரில் தரிசனம்‌ செய்தனர்.


கோவை:கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஆதியோகி ரதத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ 'ஆதியோகி ரத யாத்திரை' ஆண்டுதோறும்‌ நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவ சிலையுடன்‌ கூடிய 5 ரதங்கள்‌ கடந்த மாதம்‌ கோவையிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின்‌ 4 திசைகளில்‌ பயணத்தைத் தொடங்கின.

அதில்‌ ஒரு ரதம்‌ பொங்கல்‌ தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு சென்றது. பாரியூர்‌, சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர்‌, ஆப்பகூடல்‌, கூகலூர்‌ என பல்வேறு இடங்களுக்குப் பயணித்து பிப்ரவரி 1ஆம்‌ தேதி கோபிக்கு வருகை தந்தது.



பல்வேறு கிராமங்களில்‌ வீதி வீதியாகச் சென்ற இந்த ரதத்திற்குப் பொதுமக்கள்‌ ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்‌. குறிப்பாக, வெளியூர்களுக்கு அதிகம்‌ பயணம்‌ செய்யாத கிராமப்புற மக்கள்‌, முதியவர்கள்‌ என பல தரப்பட்ட மக்கள்‌ தங்கள்‌ விட்டை தேடி ஆதியோகி வந்ததைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்‌.

கோபியிலிருந்து கொடிவேரி, அரசர்‌, பெருந்துறை, பங்களா புதூர்‌ போன்ற இடங்களுக்கு செல்லும்‌ இந்த ரதம்‌ பிப்ரவரி 10ஆம்‌ தேதி வரை ஈரோட்டு மாவட்டத்தில் இருக்கும்‌. பின்னர்‌, அங்கிருந்து கோவைக்குப் பயணிக்கும்‌.

இந்த யாத்திரையில்‌ பிப்ரவரி 18ஆம்‌ தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும்‌, கோபியில்‌ உள்ள லிங்க பைரவியிலும்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...