கோவையில் போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழா - மாநகர காவல் ஆணையர் சாகசம்

கோவையில் நடைபெற்ற போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரோப் கட்டி 3வது மாடியில் இருந்து சரசரவென இறங்கியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் டி-பிரிவு போலீசாருக்கு சிறப்பு பணிக்குழு சார்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் நிறைவு பெற்றது.



கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் டி-பிரிவு போலீசாருக்கு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பணி குழு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.



இந்த பயிற்சியில் கோவை மாநகரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 30 போலீசாருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.



இதில் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களை மீட்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது, மறைந்திருக்கின்ற குற்றவாளிகளை பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



இதைத்தொடர்ந்து நிறைவு நாளான இன்று டெமோ வகுப்பு நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை காவல் ஆணையர் பாராட்டினர்.



இந்நிலையில் கமிஷனர் பாலகிருஷ்ணன் மூன்றாவது மாடியில் இருந்து ரோப் மூலம் இறங்கி சாகத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...