தாராபுரத்தில் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கிய போக்குவரத்து போலீசார்

தாராபுரம் வழியாகத் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்.


திருப்பூர்: பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்குப் போக்குவரத்து போலீசார் ஒளிரும் பட்டைகளை பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.

திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், எடப்பாடி உள்ளிட்ட பல பகுதியிலிருந்து தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக காலை முதல் இரவு வரை விடிய விடியப் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சாலையில் நடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்திலிருந்து பாதுகாப்பாகச் செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பழனி செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கா வண்ணம் பாதயாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிகாரிகள் அலங்கியம் ரவுண்டானா சாலையில் நின்று பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வரிசையில் நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் சாலையில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், ஒளிரும் பட்டைகளைப் பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...