உடுமலையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கல்

உடுமலையில் உள்ள காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கல்.


திருப்பூர்: உடுமலை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி, திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று 9வது வாரமாக காந்தி ஆசிரமம் உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு விலையில்லா சத்துணவு வழங்கப்பட்டது.



இதில் ரொட்டி, பால், முட்டை, பேரிச்சைப்பழம், எள்ளுருண்டை, கடலைமிட்டாய், வாழைப்பழம், அவித்த நிலக்கடலை,பாசிப்பயறு,பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர விஜய் ரசிகர் மக்கள் இயக்கம் நகரத் தலைவர் ராமன், நகர நிர்வாகிகள் அப்துல்லா காஜா, பிரபு, செந்தில், சந்திரன், நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...