உடுமலையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கல்

உடுமலையில் உள்ள காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கல்.


திருப்பூர்: உடுமலை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி, திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று 9வது வாரமாக காந்தி ஆசிரமம் உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு விலையில்லா சத்துணவு வழங்கப்பட்டது.



இதில் ரொட்டி, பால், முட்டை, பேரிச்சைப்பழம், எள்ளுருண்டை, கடலைமிட்டாய், வாழைப்பழம், அவித்த நிலக்கடலை,பாசிப்பயறு,பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர விஜய் ரசிகர் மக்கள் இயக்கம் நகரத் தலைவர் ராமன், நகர நிர்வாகிகள் அப்துல்லா காஜா, பிரபு, செந்தில், சந்திரன், நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...