ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - பறக்கும்படை தீவிர வாகனத் தணிக்கை!

ஈரோடு கிழக்கு சட்மன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட 18ஆம் தேதி முதல் ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் 3 பறக்கும் படை மற்றும் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையிலே 4 நிரந்தர சோதனை சாவடி மற்றும் 35 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 350 போலீசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரும் வாகனங்களின் பதிவு எண்கள், ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்ட பிறகே தொகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

முக்கியமாக, பன்னீர்செல்வம் பார்க், அக்ரஹாரம், மூலப்பட்டறை, சூளை, சக்திரோடு, வீரம்ப்பம் பாளையம், குமலன் குட்டை, கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களில் வருபவர்களின் உடமைகளும் சோதனையிடப்படுகின்றன.

தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கவும் தேர்தல் விதிகளை கண்காணிக்கவும் தீவிர வாகன தணிக்கை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் பணம் பட்டுவாடா தலைவிரித்தாடும் என்பதனால் பறக்கும் படையினரின் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...