உடுமலையில் பாரம்பரியம் மாறாம தைப்பூசக் கொண்டாட்டம் - கிராம மக்கள் வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாரம்பரியம் மாறாமல் கிராம மக்கள் தைப்பூச விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.



கணபதிபாளையம் உச்சிமாகாளியம்மன் கோவில் முன்பு பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரபாகர், சவுந்திரராஜ், சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சில் அரிமா சண்முகம், வர்ஷினி இளங்கோவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கோவை பம்பை இசைக் குழுவினரின் பம்பை இசையுடன், வாளவாடி பயிற்சிப்பள்ளியின் சிலம்பம், களரி மற்றும் கோவை காவடி குழுவினரின் காவடி ஆட்டம் நடைபெற்றது.



அத்துடன் கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் முதல் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு கலக்கிய வட்டக்கும்மி, வள்ளிக்கும்மி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதி நிகழ்ச்சியாக அன்னமார் கதை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...