நீலகிரியில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் - பலூன் பறக்கவிட்டு தொடக்கி வைத்த ஆட்சியர்!

நீலகிரி எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் பலூன்களை பறக்க விட்டு துவக்கி வைத்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் பலூன்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தனர்.



நீலகிரியில் உள்ள எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது.



இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் பலூன்களை பறக்க விட்டு துவக்கி வைத்தனர்.



பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என அனைவரும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டி, தடகள போட்டி, இறகு பந்து போட்டி, கபடி போட்டி, சிலம்பம், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டி, ஹாக்கி போட்டி, கையுந்து போட்டி என பல்வேறு போட்டிகள் இந்த மாதம் 24 வரை நடைபெறும்.

அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.



அதனைதொடர்ந்து பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.



இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...