எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது -அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து.


ஈரோடு: ஈரோட்டில் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருக்கின்றனர். கட்சித் தொண்டர்களை சந்திப்பது, ஆதரவு அமைப்புகளை சந்திப்பது, வாக்காளர்களைச் சந்திப்பது என ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் பிரச்சாரம் சென்றாலும், மறுபுறம் ஒபிஎஸ், இபிஎஸ் அதிமுக தலைமை கைப்பற்றுவது குறித்த விவகாரம் பெரும் விவாதத்தினை எழுப்பின. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்து எடப்பாடி அணிக்கும், பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே சிக்கல் நீடித்தன.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தேர்தல் களத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்திருக்கின்றது.

இதனால் எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றார்.



இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் கலந்துரையாடினார்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எங்களுக்கு ஒளி பிறந்துள்ளது, ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...