எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது -அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து.


ஈரோடு: ஈரோட்டில் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருக்கின்றனர். கட்சித் தொண்டர்களை சந்திப்பது, ஆதரவு அமைப்புகளை சந்திப்பது, வாக்காளர்களைச் சந்திப்பது என ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் பிரச்சாரம் சென்றாலும், மறுபுறம் ஒபிஎஸ், இபிஎஸ் அதிமுக தலைமை கைப்பற்றுவது குறித்த விவகாரம் பெரும் விவாதத்தினை எழுப்பின. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்து எடப்பாடி அணிக்கும், பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே சிக்கல் நீடித்தன.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தேர்தல் களத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்திருக்கின்றது.

இதனால் எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றார்.



இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் கலந்துரையாடினார்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எங்களுக்கு ஒளி பிறந்துள்ளது, ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...