பல்லடத்தில் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வதைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய செயல்பட்டுவருகிறது.

இந்தப் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படும்.



இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.



பேருந்து நடத்துனர் அறிவுறுத்தினாலும், கல்லூரி மாணவர்கள் அதைக் கேட்காமல் பேருந்து படிக்கட்டுகளில் சாகசம் என நினைத்து உயிர் பயமின்றி தொங்கியபடி நாள்தோறும் பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்துகள் நடைபெற்று உயிர் பலி ஏற்படும் முன்பு, மாணவர்களின் இந்த ஆபத்தான பேருந்துப் பயணத்தை தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...