வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கோவையில் தனியார் நிறுவனம் மோசடி

கோவை மாவட்டம், வடகோவையில், ஏர்குளோபல் ராஜ்டூர் என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த கோவை புலியகுளத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆலாந்துறையை சேர்ந்த மாரிமுத்து, மலுமிச்சம்பட்டியை சேர்ந்த இந்துஜா ஆகியோர், இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வடகோவையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர்கள் சென்றபோது, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பணம் செலுத்துமாறு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதன்படி, சந்தோஷ்குமார் 3.30 லட்சம் ரூபாய், மாரிமுத்து 1.50 லட்சம் ரூபாய், சிந்துஜா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்து பல மாதங்களாகியும் வேலை எதுவும் பெற்றுத்தராமல் இருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 3 பேரும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததைத்தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...