துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு உதகையில் மாணவர்கள் அஞ்சலி

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழந்தோருக்கு உதகையில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.



நீலகிரி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்காக, உதகையில் பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 5 முறைக்கு மேல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஏரளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தோருக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.



மேலும் பள்ளி தாளாளர் செல்வநாதன் தலைமையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மௌன அஞ்சலி செலுத்திய மாணவர்கள் பின்னர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் மற்றும் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து வாடும் மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...