வால்பாறை அருகே பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து - இருவர் பலி

வால்பாறை அருகே அரசு பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் 2 பேர் பலி. பேருந்து அதிவேகமாக வந்ததால் தான் விபத்து நிகழ்ந்ததாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்காமல் பேருந்து சிறை பிடிப்பு.



கோவை: வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட் பகுதியில் விபத்துக்கு காரணமான பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட்டை சேர்ந்தவர்கள் அர்விந்த்(25) மற்றும் சந்தோஷ்(20). இருவரும் அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.



அப்போது எதிரே வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.



இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



பேருந்து அதிவேகமாக வந்ததால் தான் விபத்து நிகழ்ந்ததாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்காமல் பேருந்தைச் சிறை பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...