கோவை மதுக்கரை அருகே வீட்டில் தீ - டிவி, நகைகள், ஆவணங்கள் எரிந்து நாசம்!

கோவை மதுக்கரை அருகே பாலத்துறையில் வீரக்குமார் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் டிவி, நகைகள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமானது. மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மதுக்கரை அருகே குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்ற நேரத்தில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, நகைகள், டிவி உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் (34). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றதாக தெரிகிறது.

அப்போது பொள்ளாச்சி அருகே சென்றபோது அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் செல்போன் மூலம் அழைத்து வீட்டில் உள்ளே தீப்பிடித்து எரிவதாக தகவல் அளித்துள்ளார். மேலும் அவர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தார்.



இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த டி.வி, உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 4.5 சவரன் தங்க நகை, பல்வேறு ஆவணங்கள் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமானது.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பழனிக்கு செல்வதற்கு முன்னதாக வீட்டில் விளக்கு பற்றவைத்து சென்றதாக தெரிகிறது. எனவே விளக்கு மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...