கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் - பல்லடத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் நாளை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பல்லடம் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் சுகந்தி, நில வருவாய் ஆய்வாளர் அனிதா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள், கடையில் பணிபுரியும் தொழிலாளர்கள்,

கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு எப்படி அணுகுவது என்பது குறித்தும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள், வேலை செய்யும் சுதந்திரம், சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெரும் உரிமை குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.



நாளை அரசு பள்ளி மற்றும் பொது இடங்களில் கையெழுத்து இயக்கம் நடத்திடவும், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...