கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் - பல்லடத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் நாளை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பல்லடம் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் சுகந்தி, நில வருவாய் ஆய்வாளர் அனிதா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள், கடையில் பணிபுரியும் தொழிலாளர்கள்,

கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு எப்படி அணுகுவது என்பது குறித்தும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள், வேலை செய்யும் சுதந்திரம், சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெரும் உரிமை குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.



நாளை அரசு பள்ளி மற்றும் பொது இடங்களில் கையெழுத்து இயக்கம் நடத்திடவும், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...