கிணத்துக்கடவு அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை!

கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக புகுந்து, வாழை மரங்களை கடித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி, மரவள்ளி, வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோதவாடி கிழக்குப் பகுதியில் உள்ள சிவசாமி என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார்.



சாகுபடி செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் வாழை வளர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில் வாழை தோப்புக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.



இரவு நேரங்களில் வரும் காட்டு பன்றிகள் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரத்தின் அடிப்பகுதியை கடித்து சேதப்படுத்தி வருவதால், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...