உடுமலை அருகே தைப்பூச நிறைவு நாள் விழா - நள்ளிரவு வரை வள்ளி கும்மியாட்டம் ஆடி சிறப்பு வழிபாடு!

தைப்பூச திருவிழா நிறைவு நாளையொட்டி, உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூர் பால விநாயகர் கோவிலில் ஆண்கள், பெண்கள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நள்ளிரவு வரை வள்ளி கும்மியாட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே தைப்பூச திருவிழா நிறைவு நாளை ஆண்கள், பெண்கள் என பலரும் பங்கேற்று வள்ளி கும்மியாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

தைப்பொங்கலுக்கு பிறகு கிராமங்களில் தைப்பூசம் என்பது சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். முருகப் பெருமானை வழிபடும் தைப்பூசத்தின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது.



இதனை முன்னிட்டு உடுமலை அருகே அந்தியூர் ஊராட்சி சடையகவுண்டன் புதூர் ஜீவா நகரில் பால விநாயகர் கோவிலில் உள்ள முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதனிடையே கோவில் முன் தேர்கோலமிட்ட பக்தர்கள், முருகன் சிலையை சிறப்பாக அலங்கரித்து மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



முருகப்பெருமானின் கதைகளை 40 பாடல்களாக பாடி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. குறிப்பாக இதில் வள்ளியின் பிறப்பு திருமணம் குறித்த பாடல்கள் முக்கிய பங்கு வகித்தது. பாடுபவர்கள் மையமாக நிற்க சுற்றிலும் பெண்கள், ஆண்கள் ஆடும் கும்மியாட்டம் வள்ளி கும்மியாட்டம் எனப்படுகிறது.

குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் இணைந்து பாரம்பரிய வாத்தியத்துடன் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த கும்மியாட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...