உடுமலை அருகே தைப்பூச நிறைவு நாள் விழா - நள்ளிரவு வரை வள்ளி கும்மியாட்டம் ஆடி சிறப்பு வழிபாடு!

தைப்பூச திருவிழா நிறைவு நாளையொட்டி, உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூர் பால விநாயகர் கோவிலில் ஆண்கள், பெண்கள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நள்ளிரவு வரை வள்ளி கும்மியாட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே தைப்பூச திருவிழா நிறைவு நாளை ஆண்கள், பெண்கள் என பலரும் பங்கேற்று வள்ளி கும்மியாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

தைப்பொங்கலுக்கு பிறகு கிராமங்களில் தைப்பூசம் என்பது சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். முருகப் பெருமானை வழிபடும் தைப்பூசத்தின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது.



இதனை முன்னிட்டு உடுமலை அருகே அந்தியூர் ஊராட்சி சடையகவுண்டன் புதூர் ஜீவா நகரில் பால விநாயகர் கோவிலில் உள்ள முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதனிடையே கோவில் முன் தேர்கோலமிட்ட பக்தர்கள், முருகன் சிலையை சிறப்பாக அலங்கரித்து மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



முருகப்பெருமானின் கதைகளை 40 பாடல்களாக பாடி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. குறிப்பாக இதில் வள்ளியின் பிறப்பு திருமணம் குறித்த பாடல்கள் முக்கிய பங்கு வகித்தது. பாடுபவர்கள் மையமாக நிற்க சுற்றிலும் பெண்கள், ஆண்கள் ஆடும் கும்மியாட்டம் வள்ளி கும்மியாட்டம் எனப்படுகிறது.

குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் இணைந்து பாரம்பரிய வாத்தியத்துடன் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த கும்மியாட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...