கோவையில் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி சிகிச்சை கருத்தரங்கு - வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பதாக சங்க தலைவர் தங்கவேலு தகவல்!

இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் (IAGES) சங்கம் சார்பில் கோவையில் வரும் பிப்.10 முதல் 12 வரை நடைபெறவுள்ள கருத்தரங்கில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களும் பங்கேற்கின்றனர்.



கோவை: இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (IAGES) சார்பில் சிறப்பு கருத்தரங்கு, கோவையில் வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (IAGES) கடந்த 1993ஆம் துவங்கப்பட்டு, இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், பங்களாதேஷ் நேபால் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பத்தாயிரம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இரைப்பை குடல் தொடர்பான சிகிச்சையில் நவீன மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு, மற்றும் ஆய்வு கட்டுரைகளை தொடர்ந்து நடத்தி வரும் இச்சங்கத்தின் இருபதாவது தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு, மற்றும் பொருளாளர் டாக்டர் மாதேஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:



கோவையில் வரும் 10ஆம் தேதி துவங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் 2000க்கும் மேற்பட்ட இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ள உள்ளனர்.

அனுபவம் மற்றும் புகழ்மிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளனர். இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் அறுவை சிகிச்சைகள் குறித்து இளம் நிபுணர்களுக்கு நேரடி ஒளிபரப்பின் வாயிலாக காண்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கருத்தரங்கில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான கங்காதர், கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, ஈஷா அமைப்பின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...